சுதந்திரம் என்றால் என்னவென்று என் பாட்டனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை! இந்தியா சென்ற வாரம் (சனிக்கிழமை 2015) தனது அறுபத்தொன்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அறுபத்தொன்பது ஆண்டுகளை கடந்து வந்துள்ளோம். இதுவரையில் என்ன செய்தோம் என்று கவலை கொள்வதா! இல்லை அறுபத்தொன்பது ஆண்டுகளாக சுதந்திர காற்றை சுவாசித் துள்ளோம், இந்நாள் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் பொன்னாள் என்று மகிழ்வதா!. இல்லை இல்லை அன்று லைக்காட்சியில் சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றம் இருந்தது, திரைப்படம் கூட ஒளிபரப்பினார்கள் அன்று விடுமுறை நாள் என்று அறிவிப்பதா ? உண்மையில் 1947ஆம் வருடம் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது சாமான்ய மக்களுக்கு சுதந்திரம் என்றால் என்னவென்று தெரிந்து இருக்குமா? அவர்கள் ஷங்கரின் திரைப்படத்தில் வருவது போல் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள், ஆனால் புரிதல் என்னவாக இருந்திருக்கும். என் பாட்டனுக்கு சுதந்திரம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்பில்லை!. ஆதலால் தான் 1947ஆம் ஆண்டு சுதந்தி...
- Get link
- X
- Other Apps